அட்சய திருதியை: சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

அட்சய திருதியை நாள் என்பதால் இன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும்
பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு
Published on
Updated on
1 min read

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதையடுத்து, மக்களின் வசதிக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அட்சய திருதியை நாளில் அதிக அளவில் பத்திரப் பதிவு நிகழும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும்.

அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com