ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார்.

News image

வசந்தி தேவி

Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:34 pm IST

பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார்.

அவருக்கு வயது 86 ஆகும். சென்னையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானர்.

திண்டுக்கலில் 1938 ஆம் ஆண்டு பிறந்த அவர், சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். வசந்திதேவி, 1992- 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக பொறுப்பு வகித்தவர்.

2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.

2016 பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்.

பெண்கள், குழந்தைகளின் கல்வி, உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றிவர் முனைவர் வசந்திதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Noted academician and former Vice-Chancellor of Manonmaniam Sundaranar University, Dr. V. Vasanthi Devi, passed away on Friday. She was 86.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.