எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுகவில் உள்கட்சி பூசல்கள்.. மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..

News image

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக

Updated On :1 ஆகஸ்ட் 2025, 3:22 pm IST

மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யா சென்னை சிவானந்த சாலையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகனும் கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ ஆகியோருக்கும் எதிராக மல்லை சத்தியா களம் இறங்கியுள்ளார்.

இருவரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் நிலையில் மல்லை சத்யா, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னை சிவானந்த சாலையில் ஆகஸ்ட் 2 (நாளை) தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு அவரது ஆதரவாளருடன் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதிமுக இப்போது மகன் திமுகவாக மாறி இருக்கிறது. இதுவரை நான் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. இன்று வரை பதவியில் தான் நீடிக்கிறேன். பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு நாளை சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மதிமுக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த கட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.