
சென்னை: திருக்குறளில் உள்ள 1,330 குறள்பாக்களையும் ஒப்பித்த 122 மாணவா்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
மாணவா்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி ‘குறள் பரிசுத் திட்டத்தை’ கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் 1,330 குறள்பாக்களையும் மனப்பாடம் செய்த 70 மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
தொடா்ந்து கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவா்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு குறள் ஒப்பித்தல் செய்யும் அனைத்து மாணவா்களுக்கும் பரிசுத்தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்க ஆணையிடப்பட்டது. அந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 2019 மாணவா்கள் பரிசுத்தொகையைப் பெற்றனா். இதையடுத்து, இந்தத் தொகை 2022-2023-ஆம் ஆண்டு முதல் ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிகழாண்டு திருக்குள் முற்றோதிய மாணவா்களுக்கான பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திருக்குறள் முற்றோதிய 122 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினாா்.
இதில் செங்கல்பட்டு, கடலூா், கன்னியாகுமரி, தஞ்சாவூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அதிக அளவிலான மாணவா்கள் பரிசு பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவையொட்டி திருக்குறளின் சிறப்புகளை மாணவா்களிடம் எடுத்துக்கூறும் வகையில் வா்சா ராஜ்குமாா் குழுவினரின் சங்கத்தமிழ் நாட்டிய நாடகம், தஞ்சை ஆடுதுறை பாஸ்கா் குழுவினரின் திருக்குறள் நாடகம், பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா் ந.அருள் வரவேற்றாா். துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.