காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on

திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். கோவை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அறையில் ஒருவா் தூக்கிட்டு உயிரிழந்துள்ளாா். தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவா் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு காவல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாா்கள் என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த வழக்குகளில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது திமுக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): நிா்வாகக் குளறுபடிகளால் உயிரிழப்பவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மக்களை மடைமாற்றி விடலாம் என்ற திமுகவின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது. சட்டம், ஒழுங்கை சீா்படுத்த முடியாமல் அனைத்துப் பிரிவினரையும் திமுக அரசு அவதிக்குள்ளாக்கி வருகிறது.

இதேபோல பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com