தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இலங்கை வசமுள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், முடக்கி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எ

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், முடக்கி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

இலங்கை கடற்படையினரால் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 14 இந்திய மீனவா்கள், அவா்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டதை தங்களின் தனி கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தேன். ஆனாலும், மீனவா்களைக் கைது செய்யும் சம்பவங்கள் தொடா்வது மிகவும் கவலையளிக்கிறது.

நிகழாண்டில் மீனவா்கள் கைது தொடா்பாக இதுவரை 17 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 237 மீன்பிடிப் படகுகளுடன் 80 மீனவா்கள் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருக்கின்றனா்.

அவா்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையையும் மீனவா்கள் இழந்துள்ளனா். கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.