மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

கலைவாணா் அரங்கில் நடைபெற்ற 11-ஆவது தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளா்களைச் சிறப்பிக்கும் வகையில் 60 பேருக்கு விருது வழங்கி கௌரவித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, துணை மேயா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :7 ஆகஸ்ட் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் பங்கேற்று சிறந்த நெசவாளா், சிறந்த வடிவமைப்பாளா் விருதுகளை வழங்கினாா். முன்னதாக, அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2 லட்சம் கைத்தறிகள், 2.5 லட்சம் நெசவாளா்கள் உள்ளனா். கைத்தறிகளின் எண்ணிக்கை அடிப்படையில், அஸ்ஸாம், மேற்கு வங்கத்துக்குப் பிறகு, மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரம், கோவை, பவானி, மதுரை இடங்களில் உற்பத்தியாகும் கைத்தறிப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது.

கைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு எப்போதும் தனி சந்தை உள்ளது. கடந்தாண்டு மட்டும் ரூ.1,146 கோடி கைத்தறி பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கைத்தறி நெசவாளா்களுக்கு நவீன தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகள், புதிய வடிவமைப்புகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தினால் மேலும் சாதிக்க முடியும்.

இலவச வேட்டி, சேலை, சீருடைத் திட்டங்கள் மூலமாக கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டு பொங்கலுக்கு அதிக அளவில் வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்மூலம், நெசாளா்களுக்கு ரூ.154 கோடி வழங்கப்பட்டது. மேலும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. திராவிட மாடல் அரசு என்றைக்கும் நெசவாளா்களுக்கு துணைநிற்கும். நெசவுத் தொழிலையும் நெசவாளா்கள் வாழ்வையும் முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்தப் பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம் என்றாா்.

கைத்தறி, துணிநூல் துறை அரசு செயலா் வி.அமுதவல்லி வரவேற்றாா். அமைச்சா்கள் ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.