திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்த அன்புமணி நீதிபதி அறையில் ஆஜராகியிருக்கிறார். காணொலியில் ராமதாஸ் பங்கேற்பார் என்று தகவல்.

News image

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

Updated On :8 ஆகஸ்ட் 2025, 5:33 pm IST

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் இல்லத்தில் தனது உதவியாளர் ஒருவருடன் தனி அறையில் இருந்து நீதிபதியிடம் பேச ராமதாஸ் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (ஆக. 9ஆம் தேதி) பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

நீதிபதியின் அழைப்பை ஏற்று, அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து நீதிபதி அறையில் அமர்ந்திருக்கிறார். தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், நீதிமன்றத்துக்கு வர முடியாது என கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, காணொலி வாயிலாக ஆஜராக ஒப்புக் கொணடார் ராமதாஸ்.

இருவரிடமும் சமரசம் பேச நீதிபதி முயற்சி எடுத்திருக்கும் நிலையில், காணொலி வாயிலாக பேசும் வசதி உள்ள அறையில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியிடம் நேரிலும் ராமதாஸிடம் காணொலியிலும் பேசவிருக்கிறார்.

இதையடுத்தே, நாளை அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்.

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் - அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.