தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு.

News image

கோப்புப்படம் - Din

Updated On :8 ஆகஸ்ட் 2025, 9:53 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 8) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஆக. 4-இல் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74,360-க்கும், ஆக. 5-இல் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,960-க்கும், ஆக. 6-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, வியாழக்கிழமை(நேற்று) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,400-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.75,200-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,470-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையானது நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால், மக்களிடையே சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

The price of gold jewellery in Chennai today (Aug. 8) has increased by Rs. 560 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.