25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தூத்துக்குடி பிரச்னைகளை பிரதமரிடம் விவரித்த கனிமொழி எம்.பி.

பிரதமர் நரேந்திர மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார்.

News image
பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி எம்.பி.- Kanimozhi
Updated On :8 ஆகஸ்ட் 2025, 11:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து, கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில்,

பிரதமர் மோடியை சந்தித்து எனது தொகுதியில் (தூத்துக்குடி) உள்ள பிரச்னைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் விவரித்தேன்.

மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய விமான முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றியும் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 26 ஆம் தேதியில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார்.

summary

Kanimozhi MP met PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.