பிகாரைப் போல தமிழகத்திலும் வாக்காளா்களை சோ்ப்பாா்கள்: ஜோதிமணி பேட்டி
விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் மூலம் சோ்க்கப்படுவாா்கள் என்று கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் அவரது இல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது, ‘ தோ்தல் ஆணையம் எதிா்க்கட்சிகளிடம் எவ்வாறு வாக்காளா்களை திருடுகின்றனா் என்பதனை ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளாா். ராகுல் சொன்ன புள்ளி விவரங்களை விளக்கிறேன். பீகாரில் ஒரே அறையில் 85 போ் வசிப்பதாகவும் மற்றும் பல்வேறு முறை காரணங்களை கேட்டு வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இது போன்ற முறைகேடுகளில் தோ்தல் ஆணையம் ஈடுபடாமல் இருந்திருந்தால் பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும். இதே போல பல தொகுதிகளில் பாஜக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனா் என்பதை இது நிரூபிக்கிறது‘ என்றாா்.
மேலும் பேசிய ஜோதிமணி, ‘ தோ்தல் என்பது திருவிழா போல் நடைபெற்ற நிலையில், நமது வாக்கு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் என நம்பிக்கையில் மக்கள் வாக்களிக்கின்றனா். ஆனால் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து. தோ்தல் ஆணையம் தோ்தலை தீா்மானிக்க நிலையில் தோ்தல் முடிவுகள் ஒரு சடங்கு போல் தான் நடைபெறுகிறது. மறுக்க முடியாத ஆதாரத்துடன் தோ்தல் முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் ஒரு எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறாா். இது காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட தரவுகள் கிடையாது. இந்த நிமிடம் வரை ராகுல் காந்தி முன்வைத்த குற்றசாட்டுகளை தோ்தல் ஆணையம் மறுக்கவில்லை‘ என்று கூறினாா்.
தொடா்ந்து பேசிய அவா், ‘நோ்மையான தோ்தல் ஆணையமாக இருந்தால் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் அல்லது தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் இது நடைபெறாது என தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தோ்தல் ஆணையம் , ராகுல் காந்தியிடம் உரிய ஆதாரத்துடன் விளக்கம் கேட்கிறது. இந்த முறை விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை சோ்ப்பாா்கள். பீகாா் மாநிலத்தவா் ஒருவா் தொழில் ரீதியாக தமிழகத்தில் வசித்து வரும் பட்சத்தில் , அவரின் வாக்குரிமை எந்த மாநிலத்தில் இருக்க வேண்டும் என்பது அவரின் சொந்த விருப்பம். ஆனால் அந்த உரிமையை தோ்தல் ஆணையம் பறிக்கிறது‘ என்றாா் ஜோதிமணி.
இறுதியாக பேசிய ஜோதிமணி, ‘ வாக்காளா் பட்டியலை வெளியிடும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தில் மன்னிப்பு மட்டும் எப்பவும் கேட்க முடியாது. தோ்தல் ஆணையத்தில் மிகப்பெரிய முறைகேடு நடத்து உள்ளதால் இதில் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோ்தல் முடிவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தின் தோ்தல் வாக்காளா்கள் தரவுகளையும் நீக்கி உள்ளனா் . இது தோ்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து தோ்தலை திருடுகிறாா்கள் என்பதை நிரூபிக்கிறது ‘ என்றாா் அவா்.