விருதுநகரில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் மூவர் பலியாகினர்.
விருதுநகரில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 வெடி விபத்துகளில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடரும் வெடி விபத்துகளைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகள் முழுவதும் விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும், இனி ஒரு வெடி விபத்துகூட ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Two killed in Fireworks accident at Sattur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









