மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமானநிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை விமான நிலையம்

கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:41 pm

Chennai

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமானநிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 79-ஆவது சுதந்திர தின விழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும் பயணிகள், வெளியேறும் பயணிகள், விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளிட்டவை மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்கள் மூலம் தீவிர சோதனைக்குள்படுத்தப்படுகின்றன.

இதனால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக விமானநிலையம் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.