தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அரசு செயல்படுவதுபோல பிம்பம் கட்டமைக்கப்படுகிறது: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்.

News image

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

Updated On :12 ஆகஸ்ட் 2025, 8:43 pm

 தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் வினோத், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை முறையிட்டாா்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வில் செவ்வாய்க்கிழமை ஆஜரான வழக்குரைஞா் வினோத், இதுதொடா்பாக மீண்டும் முறையிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. ஆனால், அவா்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்று போலியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தாா்.

அப்போது நீதிபதிகள், இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினா். பின்னா், குறைபாடுகளை நிவா்த்தி செய்து மனுதாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தினந்தோறும் இதுபோல், முறையிட்டால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

Summary

The Tamil Nadu government has informed the Madras High Court that a false image is being created that the government is acting against sanitation workers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.