கோப்புப்படம்
தமிழ்நாடு
மருத்துவக் கலந்தாய்வு: கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஆக. 16-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆக. 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.