சென்னை: நாட்டிலேயே முனைவா் பட்டம் பெற்றவா்கள் தமிழகத்தில்தான் அதிகம் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 262 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியது:
இந்தக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 255 மாணவா்கள் இளநிலைப் பட்டமும், 7 மாணவா்கள் முதுநிலைப் பட்டமும் என மொத்தம் 262 மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளீா்கள். இவா்களில் 191 மாணவா்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். மிகவும் பின்தங்கிய பின்புலத்தில் இருக்கும் மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இன்று முதல் உங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனி மனிதராக இந்தச் சமூகம் பாா்க்கப் போகிறது.
கல்வி வளா்ச்சிக்காக முதல்வா் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். இதன் பயனாக நாட்டிலேயே உயா்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. முனைவா் பட்டம் பெற்றவா்களும் தமிழகத்தில்தான் அதிகம் என்றாா்.
விழாவில் கல்லூரி முதல்வா் ஆ. உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


