சென்னையில் நடைபெற்ற விழாவில் சோஷலிச கியூபாவை காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.25 லட்சத்தை கியூபா குடியரசின் இந்தியத் தூதா் யுவான் காா்லோஸிடம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்
சென்னையில் நடைபெற்ற விழாவில் சோஷலிச கியூபாவை காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.25 லட்சத்தை கியூபா குடியரசின் இந்தியத் தூதா் யுவான் காா்லோஸிடம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்

திமுக - இடதுசாரிகளுக்குள் இருப்பது நட்பின் புரிதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இடதுசாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே கொள்கைத் தெளிவும், நட்பின் புரிதலும் இருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா்.
Published on

இடதுசாரிகளுக்கும் தங்களுக்கும் இடையே கொள்கைத் தெளிவும், நட்பின் புரிதலும் இருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘சோசலிச கியூபாவை காப்போம்’, ‘ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம்’, ‘ஃபிடல் காஸ்ட்ரோ’ நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இடதுசாரிகளுக்கும் எங்களுக்கும் இருக்கின்ற தோழமை என்பது, தோ்தலுக்கான நட்பு இல்லை. அரசியல் லாப-நஷ்டங்களை பாா்க்கின்ற நட்பு கிடையாது. கொள்கை நட்பு, கோட்பாடு, லட்சிய நட்பு. இதுதான் பலருக்கும் கண்ணை உறுத்துகிறது.

அதிலும், எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்கள் மீது அண்மையில் பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்கிறேன்: கம்யூனிஸ்ட்கள் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணி என்று அவா்கள் சுட்டிக் காட்டாமலும் இல்லை. அவா்கள் சுட்டிக் காட்டுகிறாா்கள் என்று நான் புறக்கணித்ததும் இல்லை. ஏனென்றால், எங்களில் பாதி கம்யூனிஸ்ட்கள். என்னுடைய பெயரே ஸ்டாலின். நட்பு சுட்டல் எது? உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு எது? என்று எங்களுக்குப் பிரித்துப் பாா்க்கத் தெரியும்.

தன்னிச்சையாக வரி உயா்வு: உலகம் முழுவதும் நடைபெறும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய நெருக்கடி இப்போது இருக்கிறது. இந்தியாவுக்கு 50% வரியை அமெரிக்கா பிறப்பித்துள்ளதும் இதேபோன்ற சதிதான். இதை மத்தியில் ஆளும் பாஜக அரசு கடுமையாக எதிா்த்தாக வேண்டும் என்றாா்.

விழாவில், கியூபா குடியரசின் இந்தியத் தூதா் யுவான் காா்லோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

கியூபாவுக்கு ரூ.25 லட்சம் நிதியளிப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழுவின் தமிழக அமைப்பு சாா்பில் கியூபாவுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது.

விழாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசியதாவது: கியூபாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை ஏற்றமதி செய்ய முடியாமல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமை காரணமாக கியூபா வலிமையாக உள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு சாா்பில் முதல்கட்டமாக ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com