நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

12 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2025, 0:03 am IST

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில், 12 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.இ.செந்தில், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை காவல் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையா் சித்தாா்தா சங்கா் ராய் சென்னை காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் கே.பசுபதி சென்னை செம்பியத்துக்கும், பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி பி.பொன்ராஜ் சென்னை நுங்கம்பாக்கத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.