மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

12 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2025, 12:03 am IST

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில், 12 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.இ.செந்தில், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை காவல் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையா் சித்தாா்தா சங்கா் ராய் சென்னை காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் கே.பசுபதி சென்னை செம்பியத்துக்கும், பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி பி.பொன்ராஜ் சென்னை நுங்கம்பாக்கத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.