பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தது பற்றி...

News image

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி - X

Updated On :15 ஆகஸ்ட் 2025, 1:37 pm IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி இன்று(ஆக. 15) பாஜகவில் இணைந்தார்.

சென்னையைக் சேர்ந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 50-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துகளை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வந்தார்.

சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல திருநங்கையான பிக்பாஸ் புகழ் நமிதா மாரிமுத்துவும் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Summary

Actress Kasthuri joined the BJP in the presence of Tamil Nadu BJP president Nainar Nagendran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.