வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை தடை செய்யக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்கவிருக்கிறார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அவர்கள், சுதந்திர தினமான இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொலைக்காட்சியின் அனைத்துக் குற்றப்பிரிவு செய்தியாளர்களையும் நேரடியாக சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்ததோடு நலம் விசாரித்தார்.
பின்னர் குற்றப்பிரிவு செய்தியாளர்களின் பிறந்த நாள் அன்று நேரடியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
பயங்கரமான ஆயுதங்கள் மூலமாக வன்முறையை தூண்டும் வகையிலும், குற்றங்களுக்கு வழிவகுக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை தடுக்க கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு, தமிழக அரசு மூலமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் வன்முறையைத் தூண்டும் வகையிலான ரீல்ஸ்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தனி குழுவாக சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கவும் வழிவகை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்

மே. வங்கத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சு: அபிஷேக் பானர்ஜி மீது வழக்கு!
வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



