
சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் இன்பதுரை, பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோரும், பாமகவில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார், வெங்கடேசன், தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், ஐக்கிய ஜனதா கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணிக் கட்சிகளும் மற்றும் தமிழக வெற்றிக் கழகமும் புறக்கணித்துள்ளனர். இந்தக் கட்சிகள் சார்பாக யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.