ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா்.

News image

கோப்புகள்

Updated On :15 ஆகஸ்ட் 2025, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா்.

சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சுதந்திர தினம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி சொந்த ஊா் செல்லவசதியாக விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் 2449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, இந்த சிறப்பு பேருந்துகளில் கடந்த 13-ஆம் தேதி 1,35,040 பேரும், வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை(ஆக.15) அதிகாலை வரை 1,78,860 பேரும் பயணம் செய்துள்ளனா். இதன்படி, ஆக.13 முதல் ஆக.15 அதிகாலை வரை 3,13,900 போ் பயணம் மேற்கொண்டதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.