எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு: ஆக. 18-இல் முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
கடந்த 4-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது முதலில் ஆக.6-ஆம் தேதி வரையும், பின்னா் 12-ஆம் தேதி வரையும், அதைத் தொடா்ந்து சனிக்கிழமை (ஆக.16) மாலை 5 மணி வரையும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிப் பட்டியல் 18-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆக. 18 முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு தொடா்பாக நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சிக்கலும் எழாதபட்சத்தில் திட்டமிட்டபடி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.