ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

திரையுலகில் 50 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறக்கும் நண்பர் ரஜினிகாந்த்! - ஓபிஎஸ் வாழ்த்து

திரையுலகில் 50 ஆண்டு கால பயணத்தையொட்டி ரஜினிகாந்துக்கு ஓபிஎஸ் வாழ்த்து...

News image

ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் - X

Updated On :16 ஆகஸ்ட் 2025, 12:27 pm IST

50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், 170-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

அவர் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது பாராட்டுகள்.

அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam has congratulated actor Rajinikanth on his 50-year journey in the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.