ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்: அன்புமணி

தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

News image
அன்புமணி - (கோப்புப்படம்)
Updated On :17 ஆகஸ்ட் 2025, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் சாா்பில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனங்களை உருவாக்குவதற்காக ரூ.4,155.74 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டைவிட 17.57 சதவீதம் குறைவு என்றும் இந்திய தலைமைக் கணக்காயா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மூலதனச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனச் செலவுகளை ஆந்திர அரசு 267 சதவீதமும், ஹரியாணா 103 சதவீதமும், குஜராத் 65 சதவீதமும் அதிகரித்துள்ளன.

தமிழக அரசு அதிகரிக்கவில்லை என்றாலும்கூட, நிகழாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையையாவது, காலாண்டு சராசரியின் அடிப்படையில் செலவு செய்திருக்க வேண்டும். நிகழ் நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.57,230.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாா்த்தால், ஒரு காலாண்டுக்கு சராசரியாக ரூ.14,307.74 கோடி செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் காலாண்டில் செலவிடப்பட வேண்டிய தொகையைவிட ரூ.10,000 கோடிக்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் சாதனை படைத்துவிட்டதாக வீண் விளம்பரம் செய்து வரும் தமிழக அரசு, உண்மையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டும்தான் முதலிடத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.