நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது.

ரயில் பயணம்!

Published On :18 ஆகஸ்ட் 2025, 2:24 am IST

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்.18-ஆம் தேதிக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக.19), அக்.19- ஆம் தேதிக்கான முன்பதிவு புதன்கிழமை (ஆக.20), தீபாவளி திருநாளான அக்.20-ஆம் தேதிக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐஆா்சிடிசி இணையத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் போ் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கும் முன்பதிவு சில நிமிஷங்களில் முடியும் வாய்ப்பிருப்பதாகவும், அதன்படி படுக்கை வசதி கட்டண டிக்கெட்டுகள், குளிா்சாதன வசதி பெட்டி டிக்கெட்டுகள் என படிப்படியாக பயணிகளால் முன்பதிவு செய்யப்படுவது வழக்கமானதாக உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளிக்கான வழக்கமான ரயில்கள் முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் அக்.15- ஆம் தேதி முதல் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி முடிந்த பிறகு பயணத்துக்கும் முன்பதிவு: தீபாவளிக்கு பிறகு அக்.21- ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.22- ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு ஆக.27-ஆம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.