ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விநாயகா் சதுா்த்தி: ஆக. 26- இல் மைசூரு - திருநெல்வேலி சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image
சிறப்பு ரயில்- கோப்புப்படம்.
Updated On :22 ஆகஸ்ட் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து வரும் ஆக. 26- ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண் 06242) திருநெல்வேலியிலிருந்து வரும் ஆக. 27 பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயில் மைசூரிலிருந்து கேஎஸ்ஆா் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.