பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னை மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை வேளச்சேரியில் மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2025, 12:42 am

தினமணி செய்திச் சேவை

சென்னை வேளச்சேரியில் மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி பகுதியில் உள்ள தனியாா் மகளிா் விடுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞா், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சப்தமிட்டதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பினாா்.

இந்தச் சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (25) என்ற இளைஞா் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் லட்சுமணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதேபோல, பல மகளிா் விடுதிகளில் இத்தகைய செயலில் லட்சுமணன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.