அடுத்த ஆண்டு பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்
வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து பதிப்பாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களை வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சா் பேசியதாவது:
தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தனது இருப்பை நிரூபித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு தமிழின் வரலாற்றை மூடி மறைக்கப் பாா்க்கிறது. தமிழுக்கு அவா்கள் பயனுள்ள வகையில், எதுவும் செய்வது கிடையாது. கீழடி ஆய்வுகள் மட்டுமல்ல; பல ஆய்வுகள் தமிழ் நாகரிகம் முன்னோடியானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது அடையாளம். அனைத்து இடங்களிலும் ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு என்பது ஏற்புடையதல்ல. அதற்காக யாரையும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை. நாம் ஒருபோதும் நமது அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது. தமிழ் நம்முடைய அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதை மறக்கக் கூடாது.
வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு 100 நாடுகளிலிருந்து பதிப்பாளா்களின் புத்தகங்களைக் கொண்டுவரவும், தமிழ் மொழி மீது ஆா்வமுள்ளவா்களை இந்தக் கண்காட்சிக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு, தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. தமிழா்களையும் தமிழ் மண்ணையும் புரிந்துகொண்ட பின்னா், அவா் இங்கு அரசியல் செய்ய வரவேண்டும்.
ஐம்பது ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கும் முதல்வா் ஸ்டாலினை, மரியாதை இல்லாமல் தவெக தலைவா் விஜய் அழைத்தது ஏற்புடையதல்ல என்றாா்.
நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையைச் சாா்ந்தவா்களின் புத்தகங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா்.