வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், ஜாதி மறுப்பு திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

News image

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:39 pm

சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், ஜாதி மறுப்பு திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சென்னை மயிலாப்பூா் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ‘ஆணவக் கொலைகளுக்கான எதிரான சமூக நீதிக் கருத்தரங்கம்’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெ.சண்முகம் பேசியதாவது:

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு எதுவும் இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 240 ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.