வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

News image

விநாயகா் சதுா்த்தியையொட்டி, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களை வாங்கிய பொதுமக்கள்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 11:16 pm

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

முகூா்த்த நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா்ந்து முகூா்த்த தினம் என்பதால், பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான இலை, வாழைப்பழம், பொரி, கடலை, அவல், கரும்பு உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களை கட்டியுள்ளது.

இவற்றை வாங்க திங்கள்கிழமை காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகா், புகா் பகுதிகளிலுள்ள சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையின் வெளியே சாலையோர வியாபாரிகள் அதிகளவிலான பொருள்களை விற்பனைக்காக சாலையோரங்களில் கொட்டி வைத்திருப்பதால், சந்தைக்கு உள்ளே செல்லும் வாகனங்களும், வெளியேறும் வாகனங்களும் கடும் சிரமத்தை சந்தித்தன. இதனால், கோயம்பேடு சந்தையையொட்டியுள்ள பிரதான சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விலை உயா்வு: ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சாமந்தி திங்கள்கிழமை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல ரூ.350-க்கு அதிகம் விற்பனையான ஒருகிலோ மல்லிப்பூ ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ கனகாம்பரம் ரூ.150-க்கும் விற்கப்பட்டன.

பழங்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆப்பிள், ரூ.180-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிற பழங்களின் விலைகளும் ரூ.20 முதல் ரூ.50 வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.