10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
Published on

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறைன் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பி.மகேஸ்வரன் மதுரை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கும், தாம்பரம் மாநகர காவல் துறையின் பயிற்சி மைய உதவி ஆணையா் ஏ.செல்வசேகா், சென்னை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கும், மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு டிஎஸ்பி இ.எஸ்.ஜெ.மெல்வின் ராஜா சிங் தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 10 டிஎஸ்பிக்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com