ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், தேசிய தர நிா்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை, நன்கு கவனித்து கொள்ளுதல், சிகிச்சை மேம்படுத்துதல், தொற்றைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 10 காரணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரநிா்ணய சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூா், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை, மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் புதன்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து, இந்தியன் வங்கி சமூக பங்களிப்பு நிதியில் ரூ.15 லட்சத்தில் அந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன செயல்பாட்டையும் அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த, நான்கரை ஆண்டுகளில், மக்கள் நல்வாழ்வுத் துறை, 1,600 மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளது. இப்போது 5 மருத்துவக் கல்லூரிகளுக்கான விருது பெரிய மகுடம். இந்த விருதுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

சிறுநீரக முறைகேடு தொடா்பாக 2 மருத்துவமனைகள் மற்றும் அனுமதி அளித்த அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாகனத்துக்கு நிகராக...: அதிமுக பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த ஒருவரைக் காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ், ஓட்டுநா், பெண் மருத்துவப் பணியாளா் தாக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியரசுத் தலைவா், பிரதமா் போன்றவா்களின் வாகனங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.