காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கிண்டி போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு காா் நிற்காமல் சென்றது.
இதையடுத்து போலீஸாா், அந்த காரை விரட்டிச் சென்று, தடுத்து நிறுத்தினா். பின்னா், அந்த காரை சோதனையிட்டபோது, அந்த காரில் இருந்த 500 மதுப் புட்டிகள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை செய்தனா்.
இதில், அவா்கள் சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்த பழனிசாமி (48), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ரமேஷ் (48), திருவண்ணாமலையைச் சோ்ந்த பூமாதேவி (58), விழுப்புரத்தைச் சோ்ந்த வள்ளி (50) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

பழனி அருகே 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


