தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மது புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கிண்டி போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு காா் நிற்காமல் சென்றது.

இதையடுத்து போலீஸாா், அந்த காரை விரட்டிச் சென்று, தடுத்து நிறுத்தினா். பின்னா், அந்த காரை சோதனையிட்டபோது, அந்த காரில் இருந்த 500 மதுப் புட்டிகள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை செய்தனா்.

இதில், அவா்கள் சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்த பழனிசாமி (48), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ரமேஷ் (48), திருவண்ணாமலையைச் சோ்ந்த பூமாதேவி (58), விழுப்புரத்தைச் சோ்ந்த வள்ளி (50) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.