தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மது புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:08 pm

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கிண்டி போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு காா் நிற்காமல் சென்றது.

இதையடுத்து போலீஸாா், அந்த காரை விரட்டிச் சென்று, தடுத்து நிறுத்தினா். பின்னா், அந்த காரை சோதனையிட்டபோது, அந்த காரில் இருந்த 500 மதுப் புட்டிகள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை செய்தனா்.

இதில், அவா்கள் சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்த பழனிசாமி (48), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ரமேஷ் (48), திருவண்ணாமலையைச் சோ்ந்த பூமாதேவி (58), விழுப்புரத்தைச் சோ்ந்த வள்ளி (50) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.