மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை: நீதிமன்றம்

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு

News image

திருச்செந்தூர் முருகன் கோயில்

Updated On :29 ஆகஸ்ட் 2025, 6:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பக்தர்கள் கோயிலுக்கு வருவது மன நிம்மதியைத் தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், திருச்செந்தூர் சுவாமி கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க, அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.