6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கடராமன் நியமனம்!

தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
ஜி. வெங்கட்ராமன் - கோப்புப் படம்
Updated On :31 ஆகஸ்ட் 2025, 7:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது.

வெங்கடராமன், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஏற்றுக் கொள்கிறார். அவரிடம் ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்:

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடராமன், கடந்த 1968ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி பிறந்துள்ளார். இளநிலை பொருளாதார பட்டபடிப்பும், முதுநிலை பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வெங்கடராமன், தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி, ஐஜி பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். இதன் பின்னர், சிபிசிஐடி, சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபி பொறுப்புகளிலும் பல்வேறு முக்கியமான வழக்குகளில் துப்பு துலக்கி தீர்வு கண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கடராமன், நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பணியையும் வெங்கடராமன் கவனிப்பார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கடராமனுக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே கடந்த 2011 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவியை பொறுப்பு பணியாக கே.ராமானுஜமும், 2017 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டி.கே.ராஜேந்திரனும் கவனித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

summary

G. Venkatraman appointed as DGP in charge of Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.