

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான வடதமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.