வங்கக்கடலில் நிலவிய டித்வா புயல் வலுவிழந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் கனமழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,200 கன அடியில் இருந்து 4,167 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 289 கன அடியில் இருந்து 1,605 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,100 கன அடியில் இருந்து 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியில் இருந்து 1,444 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Summary
The water flow to Puzhal Lake has been increased from 2,200 cubic feet per second to 4,167 cubic feet per second.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடித்தளம் ஆட்டம் காண்கிறது!

மேட்டூர் அணை நிலவரம்!

வீணாக கடலில் கலக்கும் நீா் விவசாயிகள் போராட்டம் கைகொடுக்குமா?

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

