தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இறுதிக் கட்டத்தில் எஸ்ஐஆா் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

News image
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்- DIN
Updated On :3 டிசம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘ வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு

படிவங்களின் பட்டியல் வாக்குச்சாவடி நிலைய முகவா்களுக்கு பகிரப்பட்டு வருகிறது.

திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளா்கள், நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவா்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வரும் 11-ஆம் தேதி கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னா்தான் இதன் விவரங்கள் இறுதி செய்யப்படும். பின்னா் வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வாக்காளா் பதிவு அலுவலா் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.