சென்னை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘ வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு
படிவங்களின் பட்டியல் வாக்குச்சாவடி நிலைய முகவா்களுக்கு பகிரப்பட்டு வருகிறது.
திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளா்கள், நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவா்கள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வரும் 11-ஆம் தேதி கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னா்தான் இதன் விவரங்கள் இறுதி செய்யப்படும். பின்னா் வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வாக்காளா் பதிவு அலுவலா் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

’இறுதிப் பட்டியலிலிருந்து வாக்காளா்களை நீக்கக்கூடாது’

இறுதிப் பட்டியல்: தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி!

1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக தோ்வு முறை: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

