நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஊர்வலமாக வந்தடைந்த புனித நீர்!

பல நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் பற்றி..

News image
புனித நீர் கொண்டுவரப்படும் காட்சி
Updated On :4 டிசம்பர் 2025, 7:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட நீர் காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின் ஊர்வலமாகப் புறப்பட்டு திருக்கோயிலை அடைந்தது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும் கோயில் நகரின் பல நூற்றாண்டுகளைக் கண்ட சிறப்புமிக்க காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் 8ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. திருக்கோயில் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டம் அடைந்த நிலையில் யாகசாலை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் யாகசாலையில் வைக்கப்படும் முக்கிய 5 கலசங்களுக்கான புனித நீர் பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, மேளதாளங்கள் கைலாய வாக்கியங்கள் முழங்க இரு குடைகள் நடுவே திருக்குடங்கள் ஊர்வலமாகக் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்கோயிலுக்குச் சென்றடைந்தது.

summary

Kanchipuram Ekambaranathar Temple Maha Kumbabhishekam: Holy water arrived in procession!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.