மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல: தமிழக அரசு விளக்கம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து அரசு தரப்பில் அமைச்சர் ரகுபதி, ஆர்.எஸ். பாரதி விளக்கம்

News image
Updated On :4 டிசம்பர் 2025, 3:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு என்று அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி விளக்கமளித்து பேசுகையில், ``கார்த்திகைத் திருநாள் தமிழர்களுக்கான பண்டிகை; உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுவர். இதில் இந்துத்துவத்துக்கு எந்த வேலையும் கிடையாது.

தற்போது திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவது குறித்து பிரச்னையைக் கிளப்பி, நீதிமன்றத்தில் ஓர் உத்தரவையும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், எந்த இடத்தில் தீபம் ஏற்றுகிறோமோ, அதே இடத்தில்தான் தீபமேற்ற வேண்டும் என்று 2024-லிலேயே நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அதனை அறியாதவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளார். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். முதல்வர் ஸ்டாலினை போல சட்டத்தை மதிப்பவர்கள், இந்தியாவிலேயே கிடையாது. சட்டத்தின் ஆட்சியே தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறவர் முதல்வர்.

2014-லிலேயே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு இல்லாமல், தனி நீதிபதியை வைத்து தீர்ப்பை வாங்கிக் கொண்டு, அனுமதி கோரினால் - எப்படி அனுமதியளிக்க முடியும்? அப்படி அனுமதியளித்தால், தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், 2014 தீர்ப்பை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

நீதிமன்றத் தீர்ப்பை மறந்துவிட்டுப் பேசுகிறவர்கள் அவர்கள்தான். 2014 தீர்ப்பின் அடிப்படையில், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமையுண்டு. 2014 தீர்ப்பையே நீதிமன்றத்தில் மறைத்தால், அதனை மக்கள் நம்புவார்களா? தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல; ஏமாளிகள் அல்ல.

மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஒரே பூமி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். தமிழ்நாடு அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டை வைப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் பணி. 2014-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கப்படி ஏற்றப்படும் இடத்தில்தான் தீபமேற்றப்பட வேண்டும் என்று அன்றைய அதிமுக வாதாடியது. அன்றைக்கு போராடியவர்கள்தான் இன்று வேண்டாம் என்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

summary

TN Minister Raghupathi explains Govt's stand on Tirupparankundram Karthigai Deepam Issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.