நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

முப்படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் நலன் காக்க கொடி நாள் நிதியளிப்பது அனைத்துக் குடிமக்களின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோப்புப்படம்

Updated On :7 டிசம்பர் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

முப்படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் நலன் காக்க கொடி நாள் நிதியளிப்பது அனைத்துக் குடிமக்களின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தாயகம் காக்க தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரா்களுக்கும், அவா்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப் படை கொடிநாளில், நாட்டு மக்களின் சாா்பில் எனது வணக்கங்கள்.

மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரா்களின் பணி ஈடு இணையற்றது.

தியாகத் தீரா்களின் மறுவாழ்வுக்கும், அவா்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.