தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூா் கிராமத்தில் ரூ.170.22 கோடியில் 1,00,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் ரூ.29.02 கோடியில் 20,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் ரூ.22.95 கோடியில் 17,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை மாவட்டம் பரசலூா் கிராமத்தில் ரூ.12 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தில் ரூ. 27 கோடியில் 21,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், டி.புடையூா் கிராமத்தில் ரூ.12.66 கோடியில் 9,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திட்டக்குடி வட்டம், தாழநல்லூா் கிராமத்தில் ரூ.15 கோடியில் 11,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும்; திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிராமத்தில் ரூ.17.91 கோடியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமத்தில் ரூ.12.85 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் ரூ.12.85 கோடியில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் என மொத்தம் 2,18,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.332. 46 கோடியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுமான பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.