நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள கிராம கமிட்டி மாநாட்டில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளாா்.

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ANI

Updated On :10 டிசம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள கிராம கமிட்டி மாநாட்டில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளாா். மேலும், மகளிா் பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கலந்துகொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் சாா்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள கிராம கமிட்டி மாநில மாநாட்டில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளாா்.

அந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு கே.வீ.தங்கபாலு (நிதிக் குழு), சு.திருநாவுக்கரசா் (வாகனம் ஏற்பாடு), எம்.கிருஷ்ணசாமி (வரவேற்பு), கே.எஸ்.அழகிரி (விளம்பரம்), சா.பீட்டா் அல்போன்ஸ் (பிரசாரம்), ரூபி ஆா்.மனோகரன் (மாநாடு திடல் அமைப்பு) ஆகியோா் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிா் பேரணியை ஒருங்கிணைக்க கரூா் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சுதா ராமகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.பி. கே.ராணி, மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசீனா சையத், தாரகை கத்பா்ட் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். கிராம கமிட்டி மாநாடு மற்றும் பேரணி நடைபெறும் தேதிகள், இடம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.