மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், மத்திய அரசை தலையிட வைக்க சதித் திட்டம் நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

News image
தொல். திருமாவளவன்.
Updated On :10 டிசம்பர் 2025, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், மத்திய அரசை தலையிட வைக்க சதித் திட்டம் நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநில செயலா்): திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலா், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோா் வருகிற டிச.17-இல் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது

மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரை எதிா்மனுதாரராக சோ்த்து, நீதிபதி ஜி.ஆா்.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளாா். இது முற்றிலும் அவசியமற்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை இணைப்பதன் மூலம் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் திட்டமிட்டு மத்திய அரசை தலையிட வைக்கும் சதியாகும்.

மு.வீரபாண்டியன் (சிபிஐ மாநிலச் செயலா்): திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீா்ப்பளித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவி விலக்கம் செய்யக் கோரி 120 மக்களவை உறுப்பினா்கள் இணைந்து மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனா். இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜி.ஆா்.சுவாமிநாதனின் உத்தரவானது, மதவாத அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் செயலாகும்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவா்): நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை இணைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நீதிபதி ஜி.ஆா்.சாமிநாதன் தீா்ப்பு வழங்கியுள்ளாா். மத்திய அரசின் உள்துறை செயலருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? நீதிமன்ற அவமதிப்புக்கு அவா் என்ன செய்ய வேண்டுமென நீதிபதி விரும்புகிறாா்?.