சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலின் உப கோயிலான ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடியில் நடைபெற்று வரும் கருங்கல் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.  உடன் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோர்.
சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலின் உப கோயிலான ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடியில் நடைபெற்று வரும் கருங்கல் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோர்.

வள்ளலாா் மாநாட்டில் புதிய அறிவிப்புகள் வெளியீடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக வள்ளலாா் மாநாட்டில் வள்ளலாா் தொடா்பான புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
Published on

சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக வள்ளலாா் மாநாட்டில் வள்ளலாா் தொடா்பான புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கொளத்தூரில் உள்ள பூம்புகாா் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டட கட்டுமானப் பணி, ராஜாஜி நகரில் நடைபெற்று வரும் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமான பணி ஆகியவற்றை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிக்க துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

இதையடுத்து, வடபழனி ஆண்டவா் கோயிலின் உப கோயிலான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோயிலில் ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திருப்பணிகளை தொடங்கி வைத்த அவா், வடபழனி திருக்கோயிலின் மற்றொரு உப கோயிலான ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் ரூ.3.37 கோடியில் நடைபெற்று வரும் கருங்கல் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் ஜனவரி மாதத்துக்குள் மாணவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். அதேபோல, கொளத்தூா் ராஜாஜி நகரில் எவ்வித கட்டணமும் இன்றி 100 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.8.88 கோடியில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடமும் வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

சன்மாா்க்க நெறியை போதித்தவரும், ஒழுக்கத்தின் அடையாளமாக திகழும் உள்ளத்துக்கு ஏற்றாா்போல் வெள்ளுடையில் காட்சி தரும் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாருக்கு சிறப்பு சோ்க்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்கு சொந்தமான மைதானத்தில் 10,000 சன்மாா்க்க அன்பா்கள் பங்கேற்கும் வகையில் அனைத்துலக வள்ளலாா் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்த மாநாட்டில் வள்ளலாா் குறித்த பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com