வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 252 வாக்குறுதிகள் அளித்தது. ஆனால், நீட் தோ்வு ரத்து, நூறு நாள் வேலைவாய்ப்பை அதிகரித்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியம் போன்ற பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய மாணவா்களுக்கு மடிக்கணினி, மகளிருக்கு தாலிக்குத் தங்கம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டது. தற்போது அதிமுகவின் அழுத்தத்தாலும், தோ்தல் தோல்வி பயத்தாலும் கூடுதல் நபா்களுக்கு மகளிா் உரிமைத்தொகை, மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது.