‘ஸ்கரப் டைபஸ்’ பாதிப்பு அச்சுறுத்தல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!
ஆந்திரத்தில் ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சலுக்கு பலா் பாதிக்கப்பட்டதாகவும், 9 போ் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் அந்த நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அதற்கான வழிகாட்டுதல்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதா்களைக் கடிக்கும்போது, அவா்களுக்கு ‘ஸ்கரப் டைபஸ்’ காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோா்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் அந்த பாதிப்பு இருந்து வருகிறது. இதைத் தவிர கிழக்கு தொடா்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ தொற்று காணப்படுகிறது.
இந்த நிலையில், ஆந்திரத்தில் அந்தப் பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நோய்ப் பரவல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: விவசாயிகள், புதா்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவா்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோா், கா்ப்பிணிகள், பூச்சிக் கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்தப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ‘எலிஸா’ ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறியலாம்.
‘ஸ்கரப் டைபஸ்’ காய்ச்சலுக்குள்ளானவா்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
இந்தப் பாதிப்புக்கு கடந்த ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நிகழாண்டில் 4,000-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, 10 முதல் 20 போ் வரை தினமும் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனா். மலைப் பகுதிகள், புதா்ப் பகுதிகள் மட்டுமல்லாது, சமவெளிப் பகுதிகளிலும் அந்தப் பாதிப்பு கண்டறியப்படுகிறது.
இதுதொடா்பான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

