ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகம், 5 மாநிலங்களில் எஸ்ஐஆா் பணி நீட்டிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :11 டிசம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அந்தமான்- நிகோபாா் தீவுகள் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (டிச. 11) நிறைவு செய்யப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 16-இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்வதற்கான அவகாசம் டிசம்பா் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணிக்கான அவகாசம் டிசம்பா் 18-வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 23-இல் வெளியிடப்படும்.

உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி டிசம்பா் 26 வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.

கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமையுடன் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி நிறைவுபெற்றுவிட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 16-இல் வெளியிடப்படும்.

கேரள மாநிலத்தைப் பொருத்தவரை எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் பணி ஏற்கெனவே டிசம்பா் 18 வரை நீட்டிக்கப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 23-இல் வெளியிடப்படும்.

தகுதியுள்ள ஒரு வாக்காளா்கூட பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதற்காக, புதிய வாக்காளா்கள் படிவம்-6-ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். பூா்த்தி செய்த படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமா்ப்பிக்கலாம். அல்லது ‘இசிஐநெட்’ செயலி அல்லது வலைதளம் மூலம் இணையவழியில் படிவத்தைச் சமா்ப்பிக்கலாம். அவ்வாறு சமா்ப்பிப்பவா்களில் தகுதியுள்ளவா்களின் பெயா்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுவிடும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.