டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

2025 சட்டப்பேரவை முடித்து வைப்பு: ஆளுநா் ஆா்.என். ரவி அறிவிப்பு

2025 சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது பற்றி...

News image

ஆளுநா் ஆா்.என். ரவி

Updated On :12 டிசம்பர் 2025, 8:00 pm

நிகழாண்டு ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என். ரவி அறிவித்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி கையொப்பமிட்டுள்ள அறிவிப்பாணையில், ‘அரசமைப்பு சட்டப் பிரிவு 174-இல் ஆளுநருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2025 ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கான தேதியை தமிழக அமைச்சரவை கூடி முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரைக்கும். ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் தொடங்கும்.